பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கற்று கல்வியை நிறைவு செய்த தவராசா தர்சினி (வயது 25) என்ற பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.