தந்தையின் காரினுள் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

பிலியந்தலை பிரதேசத்தில் காருக்குள் சிக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பிலியந்தலை ஜயா மாவத்தையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மாணவன் ஏறிய போது தவறுதலாக காரின் கதவு பூட்டிக் கொண்டது

அதன்போது, காரின் கதவை திறக்க முடியாமல் மாணவன் உள்ளே மாட்டிக் கொண்டதாக தெரிய வருகின்றது.

அவரது தந்தை வீட்டிற்கு வந்து காருக்குள் இருந்து அவரை மீட்டெடுத்தபோது மாணவன் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.