மட்டு. புனித மிக்கேல் கல்லூரியில் 29 மாணவர்கள் 9A பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தன.

அதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 90 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதில், 29 மாணவர்கள் 9 A சித்திகளை பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் 8 A சித்திகளையும்,  14 மாணவர்கள் 7 A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய 198 மாணவர்களில், 179 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.