நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு : விசாரணைகள் ஆரம்பம் ?

வாகன விபத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பல பதிவுகள் வெளியாகி வருவதாகவும் அவற்றை அங்கீகரிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.