சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் கலையகத்தின் வர்ண விருது வழங்கும் விழா!
சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் கலையத்தின் பணிப்பாளர் சிஹான் அன்ரோ டினேஷ் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக கருடன் தயாரிப்பு அமைப்பின் பணிப்பாளர் எல்றோய் அமலதாஸ், விசேட விருந்தினர்களாக ஆதவன் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் லவேந்திரன் ஜெனநாயகன், ஸ்டெம்ஸ் ஹெல்த் கியார் (Care) நிறுவனத்தின் முகாமையாளர் தயாபரநாதன் கிறிஸ்னா, SKAI கராத்தே கலையகத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதி டொமினோ ஜெயதிலக் மற்றும் விருந்தினர்களாக சிரேஷ்ட ஆசிரியர் வி.இளஞ்செழியன், SKAI கராத்தே கலையகத்தின் மத்திய மாகாண பிரதிநிதி எம்.தம்பிராஜா , அகில இலங்கை சமாதான நீதிவான் கே.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கராத்தே சுற்றுப்போட்டிகளில் பதக்கங்களை பெற்ற SKAI கலையகத்தின் மாணவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அன்ரோ டினேஷ், இலங்கை தேசிய கராத்தே அணியினை தெரிவு செய்யும் தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்