செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: கைது செய்ய முற்பட்டபோது திடீர் நெஞ்சுவலி வந்த மருத்துவர்

இந்தியாவில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார
நிலையத்தில் மருத்துவராக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சீனிவாசன் (வயது – 29) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ‘மக்களை தேடி மருத்துவம்’ பிரிவில் செவிலியராக பணியாற்றி வருபவர் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த சுகன்யா (வயது – 32) என்ற கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்ணே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த போது மருத்துவர் சீனிவாசன், செவிலியர் சுகன்யாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியதாகவும் தனது ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா ரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து செவிலியர் சுகன்யாவின் புகாரை பெற்று மருத்துவர் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்டபோதுஇ அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்