நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.