முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ச, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் இன்று வியாழக்கிழமை முன்னிலையாகியுள்ளார்.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் அங்கு சமூகமளித்துள்ளார்.