குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

7

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலியிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath