எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக் கூடாது, என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்கல்வித் துறையில் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான தொலைநோக்குப் பார்வையை ஜனாதிபதி இங்கு உபவேந்தர்களுக்கு விளக்கியுள்ளார்.