மின்துண்டிப்பு நீடிப்பு

நாட்டில் இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரம் துண்டிப்பு தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மூன்று தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.