வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு -13 பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய வர்த்தகரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து பின்னர் இன்று புதன்கிழமை காலை வரை விமான நிலைய வர்த்தக வளாகத்தில் தங்கியிருந்து விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொண்டு வந்த பொதிக்குள் 21,000 சிகரெட்டுகள் அடங்கிய 105 அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்