குழந்தைகளை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்

வைரஸ் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும் என அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் வைத்தியர் சேனக கமகே, பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளுக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, சணல் கலந்த ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு தேவையான அனுமதி வழங்கினால், அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும் என அகில இலங்கை ஆயுர்வேத மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் ஜெயவீர பீரிஸ் தெரிவித்தார்.