ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வந்தவர் வெட்டி கொலை
மட்டக்குளிய பிரதேசத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
வாகனமொன்றில் வந்த இருவரினால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்டவர் எனவும், பின்னர் பிணையில் வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.