-மூதூர் நிருபர்-
திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள தோணா பகுதியில், லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று செவ்வாய் கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தின் போது, லொறியின் சாரதி ஆபத்துக்களின்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளார்.
மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கி பொதிகளை ஏற்றிக் கொண்டு குறித்த லொறி பயணித்துள்ளது.
இதன்போது லொறியின் ஸ்டேறிங் இறுகியதன் காரணமாக சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லொறி வடிகாணில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.