தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை 2022 டிசம்பர் கடைசி வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா அறிக்கையொன்றை வெளியிட்டார்.

ஒவ்வொரு பிரிவுக்கும் தெரிவு செய்யப்படவுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என புஞ்சிஹேவா அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.