நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நபர் 2016 ஆம் ஆண்டு நாரம்மல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அங்கு உதவியாளராக இருந்தவரையும் தாக்கி, கட்டிவைத்து, அங்குள்ள தூபியை சேதப்படுத்திய குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது.
நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.