இலங்கை மின்சார சபைக்கு நவம்பரில் 35.6 பில்லியன் ரூபா வருமானம்

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாத வருமானம் 33.6 பில்லியன் ரூபா என அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான நாப்தா மற்றும் டீசலை கொள்வனவு செய்வதற்கு அடுத்த மாதம் 35 பில்லியன் ரூபாவும்இ நிலக்கரி கொள்வனவுக்காக 38.45 பில்லியன் ரூபாவும் செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய மின் கட்டண திருத்தம் மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார தொழிற்சங்கங்களுடன் இன்று வியாழக்கிழமை காலை கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் செலவு முகாமைத்துவம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.