போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் நேற்று திங்கட்கிழமை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி பகுதி சேர்ந்த 28 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குற்றத்தடுப்பு உப பொலிஸ் பரிசோதகர் மேனனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சந்தேக நபர்கள் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 10 போதை ஊசி, இரண்டு கிராம் ஐஸ் போதைப் பொருள், ஒன்றரை கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.