வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டம்

-யாழ் நிருபர்-

 

786 மற்றும் 782 பேருந்து வழித்தட வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காரைநகருக்கு செல்லும் குறித்த இரண்டு பிரதான வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை திருத்தம் செய்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் போக்குவரத்துகள் முடங்கின.

இந்த போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.