போதைப் பொருள் தொடர்பான கலந்துரையாடல் – பிரதேச செயலாளர்கள் பங்கேற்கவில்லை

 

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற போதை பொருள் பாவனை தடுப்புத் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்துரையாடலில் பெரும்பாலான பிரதேச செயலாளர்கள் பங்கு பெற்றாமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நேற்று  யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாலை 2 மணியளவில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் நிகழ்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அறியக் கிடைக்கும் நிலையில் ஐந்துக்கும் குறைவான பிரதேச செயலாளர்களே பங்கு பெற்றிருந்தமை அவதானிக்க முடிந்தது.

எனினும் எஞ்சிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது.