நாட்டை விட்டு வெளியேறும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்

சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக,  இலங்கை கணினிச் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் தமித் ஹெட்டிஹேவகே இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் வரி விதிப்பினால் ஏற்பட்டுள்ள சிரமங்களினால் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.