
அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன், அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம் மற்றும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.