4 மாதங்களுக்கு பின் மீண்டும் எரிபொருள் வரிசை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் மக்கள் எரிபொருளை பெறுவதற்கு வரிசையில் நிற்பதை அவதானிக்க முடித்து.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் விநியோகிப்படவுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று ண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ண்ணெண்ணெய் பெற்றுக்கொண்டனர்.

மேலும் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று  செவ்வாய்க்கிழமை  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 23 முதல் 27 வரை மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு 229 மண்ணெண்ணெய் பௌசர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தினமும் 29 பௌசர்கள் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

இதன்படி, புதிய வேலைத்திட்டத்தின் கீழ்,  மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பௌசர்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 17 வீத அதிகரிப்பாகும் எனவும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.