கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்