தொடரை நடத்தும் நாடான கட்டார் தொடரிலிருந்து வெளியேறியது

உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்து ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.

இதனால் உலகக்கிண்ண போட்டித் தொடரை நடத்தும் நாடான கட்டார் தொடரிலிருந்து வெளியேறியது.

இதனால் குழு A இல் 4 புள்ளிகளைப் பெற்ற நிலையில் நெதர்லாந்து மற்றும் ஈக்வடோர் அணிகள் உள்ளன.

ஏற்கனவே செனகலிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்ற கட்டார், புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ட உதை மூலம் ஆறாவது நிமிடத்தில் நெதர்லாந்தின் கோடி காக்போ கோல் அடித்தார்

இந்த தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட வேகமான கோலாக இது அமைந்தது.

அதேநேரம் ஈக்வடோர் அணித் தலைவர் என்னெர் வெலன்ஸ்கி காயமடைந்து வெளியேறினார்.