நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

இன்று வியாக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

நெத்தலியின் விலை ரூ. 150 ரூபாவாலும், சிவப்பு அரிசி 6 ரூபாவாலும், கீரி சம்பா 15 ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாவாலும் குறைக்கப்படுகின்றன.

அதன்படி,  சிவப்பு அரிசி  ரூ. 199, கீரி சம்பா  ரூ. 225, பெரிய வெங்காயம்   ரூ. 225, நெத்தலி   ரூ. 1150 என விற்பனை செய்யப்படவுள்ளது.