முட்டை விலை அதிகரிப்பு
முட்டைக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதையடுத்து சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.
பண்டிகை காலத்தையொட்டி முட்டை விலை அதிகரித்துள்ளதால் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டைக்கு நுகர்வோர் அதிகார சபையினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
முன்னதாக சில்லறை விலையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டை தற்போது 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பண்டிகை காலம் என்பதால் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிக விலைக்கு விற்கும் நோக்கில், வியாபாரிகள் முட்டைகளை மறைத்து வைத்திருப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
முட்டை விலை உயர்வால் பண்டிகை காலங்களில் கேக் விலையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, சந்தையில் தற்போதைய விலையை விட மிகக் குறைந்த விலையில் முட்டை விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சிறு முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.