கை கால்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைகள், கால்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாகவும், உடலின் சில பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 40-50 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.