வயல் தகராறு : மண்வெட்டியால் தாக்கி பெண்ணொருவர் கொலை

-திருகோணமலை நிருபர்-

கஹடகஸ்திலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெடுனுவெவ பகுதியில் மண்வெட்டி தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

இம்மண்வெட்டி தாக்குதலினால் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால்தீன் ரஹ்மத்தும்மா (50 வயது) என்ற பெண்உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இரண்டு வயல்காரர்களுக்கும் இடையில் தண்ணீர் திருப்பும் வேளையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஆணொருவர் குறித்த பெண்ணை தாக்கியதாகவும் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடாத்திய குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

குறித்த மரணம் தொடர்பில் கஹடகஸ்திலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.