கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதல் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின்  சந்தேக நபர்களான ஆயிஷா சித்திகா மற்றும் மொஹமட் முபாரக்கின் மனைவி மொஹமட் வசீம் ஃபஸ்ருல் ரஹ்மான் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று புதன்கிழமை காலை இந்த இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பிலான வழக்கை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சட்டமா அதிபரிடம் பெற்றுக்கொள்ள உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களை அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

எனினும், சந்தேகநபர்கள் இன்று நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை, சந்தேகநபர்களை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக அவதானித்த நீதவான் உரிய உத்தரவை பிறப்பித்தார்.