க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் மோதல்!

-வவுனியா நிருபர்-

வவுனியா நகரப்பகுதியில் இருபாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றது.

நேற்று குறித்த பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது.

இந்நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்றுகூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்தும் தடைப்பட்டது.

இதனையடுத்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்