இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து சீருடைகள்

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளை வழங்குவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு 5 பில்லியன் ரூபாய் எனவும், இது நாட்டின் வருடாந்த உத்தியோகபூர்வ ஆடைத் தேவைகளில் 70% என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

உரிய சீருடை துணி இருப்புக்களின் முதல் பகுதி அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

அத்துடன், குறித்த துணி கையிருப்பு 20 கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.