
கிணற்றில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் வெலிமடை – சில்மியாபுர பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதில், என்.எஸ்.ஹமிதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.