கைதிகளை அழைத்து சென்ற பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றிச்சென்ற போது, நாரந்தனை பகுதியில் வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால், பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில், ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்தினை அடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு, சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்