பேருந்து விபத்து: 9 பேர் காயம்
பத்தவலவிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஹல்பே பகுதியில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 4 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவதாகவும் இவர்கள் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்