இன்று பாணின் விலை குறைகிறது

பாண் ஒன்றின் விலையை இன்று திங்கட்கிழமை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதியளவு காணப்படுவதால், நிறைவேற்று சபை கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதியளவு இருப்பின் ஒரு இறாத்தல் பாணின் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, இன்று முதல் ஒன்றின் விலை 10 முதல் 20 ரூபா வரை குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.