மட்டக்களப்பு சர்வோதய நகர் கித்துள் பகுதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் மட்டக்களப்பு சர்வோதய நகர் கித்துள் பகுதியில் 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக கற்றல் உபகரணங்கள் வாழைசேனையை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாக கொன்ட சக்தி திரு பஞ்சலிங்கம் விமலராஜின் நிதியில் 60 மாணவர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அறப்பனி் பொறுப்பாளர் தலைமையில் அலிகார் தேசிய பாடசாலை ஆசிரியரும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும்மான  நேசன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் ஆதி நாயகர் அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர், அறப்பனி தொண்டர்கள், பெற்றோர்கள் பங்குபற்றினர்