மட்டக்களப்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் நேற்று புதன்கிழமை “சுரண்டப்பட்ட பணம் எங்கே” என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர்கள் சிலரின் படத்தை பிரசுரித்து இத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அத் துண்டுப்பிரசுரத்தில் , “TCC ஈழத்தமிழர்கள் மேலைத்தேய நாடுகளில் இருந்து மாவீரர் உறவினர்களுக்கு உழைத்து அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்?”

“மாவீரர்களின் மற்றும் அவர்களது குடும்பங்களின் சாபம் உன்னை சும்மா விடுமா”, என அச்சிடப்பட்டுள்ளது.