மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நேற்று புதன் கிழமை சம்பிரதாயபூர்வ ஆரம்பமாகியது.

புதுக்குடியிருப்பு சிறி விக்னேஸ்வர் ஆலயத்தில் இருந்து அம்மன் திருவுருவச் சிலை பக்தி பூர்வமாக எழுந்தருளி செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள அம்மனின் சடங்குற்சவம் எட்டு நாட்கள் நடைபெற்று எதிர்வரும்20 ஆம் திகதி திருக்கல்யாண கால் வெட்டுதல் 21 ஆம் திகதி திருப் பச்சை கட்டு சடங்கு ஆகியன இடம்பெற்று 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் திருக்குளிர்தி வைபவத்துடன் இவ் வருடத்திற்கான திருச்சடங்கு நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்