பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நற்பட்டிமுனையிலுள்ள தனது மாமனாரின் வீட்டுக்கு சென்று விட்டு தாயும், பிள்ளையும், மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பாண்டிருப்பு பிரதான வீதியில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் எதிரே வந்த கார் ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதில் கிருத்திகா (25வயது) வைசாலி (5வயது) பிரமன் (55வயது) ஆகியோர் காயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.