மட்டு.புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி

 

-ஆர்.நிரோசன்-

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் இடம்பெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வி.கனகசிங்கம், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கல்வி பணிப்பாளர் திருமதி.ஆர்.ஏ. புவனசிங்கம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன.

இதில், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும் பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள்  மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.