-முனைக்காடு நிருபர்-
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 5 நாட்களாக இடம்பெறும் குறித்த புணரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த கொக்கட்டிச்சோலை பிரதான வீதி ஊடாக, அரசடித்தீவு, பட்டிப்பளை, அம்பிளான்துறை, காஞ்சிரங்குட போன்ற ஊர்களுக்கு செல்லும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பேருந்து சேவைகளும் வேறு வீதிகளால் பயணிப்பதால் தாம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.