ஒன்றரை வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை

ஒன்றரை வயதான குழந்தை ஒன்றை 3ஆம் மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு – க்ராண்ட்பாஸ் – சமகிபுரவில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தாய் மாமன் அதனை மாடியில் இருந்து கீழே வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு முன்னரே குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தையை வீசியெறிந்த அதன் மாமா, ஒரு மன நோயாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.