UPDATE : ஒன்றரை வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை

கொழும்பு – க்ராண்ட்பாஸ் – சமகிபுரவில் உள்ள கட்டிடம் ஒன்றின் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1ஃ2 வயதுடைய குழந்தை படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை கிராண்ட்பாஸில் உள்ள சமகிபுர வீடமைப்புத் தொகுதியின் 3வது மாடியில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை குழந்தையின் மாமா ஜன்னல் வழியாக வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குழந்தையை வீசியெறிந்த அதன் மாமா, ஒரு மன நோயாளி என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் குழந்தையின் தாயின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு, மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார்  தெரிவித்தனர்.