பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் 20 லீட்டர் கோடாவுடன், ஊரெழு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கோடாவினை கொண்டு சென்றவேளை, காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.