தேயிலை தூள் திருடிய குற்றச்சாட்டில் அறுவர் கைது‌

-பதுளை நிருபர்-

தேயிலை தூள் திருடிய குற்றச்சாட்டில் அறுவர் கைது‌ செய்யப்பட்டுள்ளது.

எல்டப் தேயிலை தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு கடமை புரிந்த ஐந்து பெண்களும் ஆணொருவரும் 44 கிலோ கிராம் தேயிலை தூளை தொழிற்சாலையில் இருந்து எடுத்து தொழிற்சாலை வளாகத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையை கண்ட தோட்ட உயர் அதிகாரி, உடன் பசறை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் தேயிலை தூளை கைப்பற்றியதோடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, 37,39,44,52,46 வயதுடைய ஐந்து பெண்களும் 52 வயதுடைய ஆண் ஒருவரும் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 சந்தேக நபர்களும் எல்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, குறித்த தேயிலையின் பெறுமதி 70000 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இன்று புதன்கிழமை சந்தேக நபர்களை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.