அடுத்த வாரம் முதல் யாழ்-சென்னை இடையே வாராந்த நான்கு விமான சேவைகள்
இந்தியாவின் அலையன்ஸ் எயார், டிசம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணத்திற்கு வணிகரீதியான விமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
அலையன்ஸ் எயார் நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விமானச் சேவையைத் தொடங்கும்.
விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும்.
அலையன்ஸ் எயாரின் முதல் சர்வதேசப் பயணத்தைத் தவிர, இது 41 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்துள்ளது.
அலையன்ஸ் எயாரின் பல்வேறு விளம்பரச் சலுகைகளைப் பற்றி மேலும் அறிய, பயணிகள் www.allianceair.in இல் உள்நுழையலாம் அல்லது அதன் பயண முகவர்களில் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்ளலாம்.