விபத்தில் ஒருவர் பலி : 16 பேர் படுகாயம்

 

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை – முள்ளி பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனையுடன் மோதி இரண்டு தடவைகள் நிலத்தில் தடம் புரண்டுள்ளது.

இதில் ஒரு பயணி உயிரிழந்துள்ளதுடன், 16 பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சைத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்