அதிசொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்து

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து கிளிநொச்சி 155 ம் மைல்கல்லில் சாரதியின் கட்டுப்பாட்டை  இழந்து குடைசாய்ந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்து  பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.